சனி, 14 மார்ச், 2009

உதிரத்தில் கரைந்த கண்ணீர்





இரத்தம், யுத்தம், சத்தம் - நித்தம்
மரணத்தோடு போராடும்
இவர்களின் வாழ்க்கையை - இனி
இருண்டு போன விடியலில்தான்
தேடிப் பார்க்கவேண்டும்


உறைய மறந்து -
உடை நனைக்கும் குருதி
உணர மறந்து -
உடன் தவிக்கும் குழந்தை


சேயின் வலியின் கொடூரம்
தாயின் விழியில் தெரிகிறது


பெற்றபோது கண்ட
பிள்ளையின் எதிர்கால கனவு
கண்ணெதிரே கரைகிறது –
உதிரத்தில்


பாலும் தேனும் கலந்து
உயிரும் உணர்வும் ஊட்டி
பொத்தி பொத்தி வளர்த்தப்பிள்ளையின்
உடல் நனைகிறது - உதிரத்தில்.

"எறும்பை கூட
கடிக்க விட்டதில்லை
எம்பிள்ளையை - இப்போ
எலும்பொடிந்து இரத்தம் கொட்டுகிறதே!

எனது இரத்தம் முழுவதும்
இழந்தாவது - எனது
குழந்தையை காப்பாற்ற மாட்டேனா!!"

வலியினால் விசும்பியழும் குழந்தையை
அணைக்க கூட முடியாமல்
தவிக்கும் தாயின் புலம்பல் - உங்கள்
காதில் கேக்கிறதா?

அஃறினைக்கு கூட அங்கம், சங்கம் அமைத்து
அறியணை ஏறி உரிமம் கேட்கிறது
ஒரு கூட்டம் - இங்கு
அடிப்படை உரிமையைக்கூட
அடியொடு பிடிங்கி எறிந்திருப்பது - உங்களுக்கு
உண்மையிலேயே தெரியவில்லையா?


எவரிடம் சென்று புகாரிடுவது
எங்கே சென்று முறையிடுவது
எப்படி இதனை சீர்திருத்துவது
எவரேனும் அறிந்திருந்தால்
எடுத்துரைக்க அந்த
இறைத்தூதர்களை அனுப்பிவையுங்கள்

-கண்ணீருடன்
மாதவன்

1 கருத்து:

துபாய் ராஜா சொன்னது…

//"எறும்பை கூட
கடிக்க விட்டதில்லை
எம்பிள்ளையை - இப்போ
எலும்பொடிந்து இரத்தம் கொட்டுகிறதே!

எனது இரத்தம் முழுவதும்
இழந்தாவது - எனது
குழந்தையை காப்பாற்ற மாட்டேனா!!"

வலியினால் விசும்பியழும் குழந்தையை
அணைக்க கூட முடியாமல்
தவிக்கும் தாயின் புலம்பல் - உங்கள்
காதில் கேக்கிறதா?

அஃறினைக்கு கூட அங்கம், சங்கம் அமைத்து
அறியணை ஏறி உரிமம் கேட்கிறது
ஒரு கூட்டம் - இங்கு
அடிப்படை உரிமையைக்கூட
அடியொடு பிடிங்கி எறிந்திருப்பது - உங்களுக்கு
உண்மையிலேயே தெரியவில்லையா?


எவரிடம் சென்று புகாரிடுவது
எங்கே சென்று முறையிடுவது
எப்படி இதனை சீர்திருத்துவது
எவரேனும் அறிந்திருந்தால்
எடுத்துரைக்க அந்த
இறைத்தூதர்களை அனுப்பிவையுங்கள்//

வலிக்கும் வரிகள்.நாங்களும் செய்னதறியாமல் கண்ணீரோடு.