பெண்ணே....
என்னை விட்டு விலகும்போது
எந்தன் ஆறாவது அறிவையும்
ஏனடி எடுத்துச் சென்றாய்!
வேண்டாம் என்றுசொல்லிவிட்டு
வேண்டுமென்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கிறாயடி!
மறுத்தல்தான் பதில் என்றால்
மௌனமாய் இருந்தபோதே
மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பேனடி!
தோன்றுவது எல்லாம் முடிவில்
தோல்வியே தேடும் என்றால்
துவழாமல் இருப்பது எப்படி பெண்ணே!