சனி, 12 ஜூன், 2010

ஒரு தேடலின் விடை




உன்னைத்தேடி உன்னைத்தேடி
உயிரின் ஒரு பாதியை
உருக்கி விட்டேனடி....

ஊற்றின் உஷ்ணத்தை
உன்னுடைய முச்சுக்காற்றுக்கு
உவமேயம் செய்தேனடி - ஆனால்
உயிர்ப்பின் அவசியம்
உணர மறந்தேனடி...

தவத்தினை மெச்சி
தோன்றிய கடவுளிடம்
வரமாய் வேண்டும்
என்று உன்னை கேட்டால்
கைபிசைந்து நிற்கிறானடி...

கருத்துகள் இல்லை: