ஞாயிறு, 13 ஜூன், 2010

எப்பொழுது வாழ்த்துவாய்


மௌனமானவளே -
வாழ்த்துகளை கூட வரைமுறைக்குள்
வைத்து தைத்துக்கொள்கிறாயடி -

காற்றோடு வந்து தான் உன் காதில்
கவிதை சொல்லவேண்டும் எனில்
காற்றினுள் கரைந்துவிடவும்
தவமிருப்பேனடி...

சுவாசமே வேண்டாமென்று - நீ
சரணம் பாடும்போது
சுவாசிக்க எப்படி தோன்றுமடி

மீண்டும் ஒருமுறை யோசித்துப்பாரடி -
காதலாய் ஏற்றுக்கொள்ளாவிடினும்
கவிதையாய் ரசித்துப்பாரடி....

கருத்துகள் இல்லை: